கீழக்கரை, மார்ச் 20: ஏர்வாடி அருகே சிக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலம் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். இங்கு புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டிடத்தை பார்வையிட்டு நோயாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார். மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நட்டார்.