எட்டயபுரம், மார்ச்19: விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துபட்டியை சேர்ந்த மொட்டையன் மகன் அந்தோணி (60). கூலி தொழிலாளியான இவர் நேற்று எட்டயபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு மொபட்டில் திரும்பி சென்றார். எட்டயபுரம் அடுத்த கழுகாசலபுரம் விலக்கு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மொபட் மோதியதில் அந்தோணி சம்பவ இடத்திலேயே பலியானார்.