சாத்தூர்,மார்ச் 19: சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு தென்மாவட்டத்தை சேர்ந்த விருதுநகர், தூத்துக்குடி,தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வர். இந்த கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா சிறப்பாக நடை பெறுவது வழக்கம். விழாவை தொடர்ந்து தேர் திருவிழா நடைபெற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.