இடி, மின்னல் தாக்கியதில் கூரை வீடு எரிந்து சாம்பல்

உளுந்தூர்பேட்டை,  மார்ச் 19: உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள  கிராமங்களில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில்  புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னமூப்பர் மனைவி உண்ணாமலை(55)  என்பவருடைய கூரை வீட்டில் இடி, மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து அனைவரும் வெளியேறி  அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

தீப்பொறி ஏற்பட்டதில் கூரை வீடு முற்றிலும்  எரிந்து சாம்பல் ஆனது. இதில் வீட்டில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான  துணிமணிகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: