உளுந்தூர்பேட்டை, மார்ச் 19: உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னமூப்பர் மனைவி உண்ணாமலை(55) என்பவருடைய கூரை வீட்டில் இடி, மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து அனைவரும் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.