பல்லாவரம், மார்ச் 19:மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (36). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், ரயில்வேயில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன. அந்த இடங்களுக்கு வேலையில் சேர்த்து விடுகிறேன் என்று கூறி, சென்னையை சேர்ந்த 7 பேரை தனித்தனியாக பல்லாவரம் வரவழைத்து, அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.27 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், சொன்னபடி, வேலை வாங்கி தரவில்லை.