திருமயம், மார்ச் 19: அரிமளம் முத்துமாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மார்க்கெட் பகுதியில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த கோயில் தேர் சக்கரங்கள் பழுதானதால் பழுதடைந்த மரச் சக்கரங்களை புதுப்பிக்க கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதை அடுத்து திருச்சி பிஎச்இஎல் நிறுவனத்தில் பழுதடைந்த மரச்சக்கரங்களுக்கு பதிலாக இரும்பால் ஆன புதிய சக்கரங்கள் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் பழுதடைந்த மரச் சக்கரங்கள் நீக்கப்பட்டு புதிய சக்கரங்கள் முத்துமாரியம்மன் கோயில் தேரில் பொருத்தப்பட்டது.