புதுக்கோட்டை, மார்ச் 19: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மையங்களின் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான கூட்டம் மற்றும் வாசகம் எழுதுதலில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களின் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான கூட்டத்தினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமையில் தொடங்கியது. மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் முன்னிலை வகித்தார்.