மயிலாடுதுறை, மார்ச் 19: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை வங்கிகள் மற்றும் அடகு கடைகளில் அடகு வைத்து கோடி கணக்கில் நடந்த மோசடி சம்பவம் புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட 8 பேரை காரைக்கால் போலீசார் கைது செய்து புதுச்சேரி காலாப்பட்டு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அந்த தனியார் நிறுவனத்தின் கிளை மேலாளர் வீரராகவன் (29) என்பவர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 1.12.2021 அன்று புதுச்சேரி மாநிலம் காரைக்கால் புதுத்துறையை சேர்ந்த இமாம் சாஹிப் மகன் முகம்மது மைதீன் (வயது 31) என்பவர் 15 பவுன் அளவில் 2 பவுன் செயின்களை எங்களது நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து 3 லட்சத்து 68 ஆயிரத்து 823 பெற்றுக் கொண்டார்.