ஊராட்சி ஒன்றிய கூட்டம் 38 தீர்மானங்கள் நிறைவேற்றம்

விருதுநகர், மார்ச் 18: விருதுநகர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விருதுநகர் ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், கற்பகவள்ளி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தரக்கட்டுப்பாட்டு கருவிகள், பட்டாசு கடைகள், குடோன்கள் கட்டுமான அனுமதி உள்ளிட்ட 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: