திருவாரூர், மார்ச்18: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2022 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந் திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,ஆயிரத்திற்குள் இருக்க வேண் டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் (ஆன்லைன்) பெற ப்பட்ட வருமானச் சான்று,தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப் பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப் பட வேண்டும்.