திருவாரூர், மார்ச்18: திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் சாரு நே ற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தினை மாவட்ட கலெக்டர் சாரு பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு தினந்தோறும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், இ- சேவை மையத்திற்கு வருகை புரிந்தவர்களிடம் மையத்தில் வழங்கப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்து, இ-சேவை மைய ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு அவர்களுக்கு தேவையான பணிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.