மானாமதுரை, மார்ச் 17: மானாமதுரையி்ல் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள் மட்டுமன்றி ஆடுகள், கோழிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஆட்டுச்சந்தையில் நேற்று காலை முதலே ஆடு, கோழி விற்பனை களைகட்டத் துவங்கியது. தாயமங்கலம், திருப்புவனம், இருக்கன்குடி உள்ளிட்ட ஊர்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ளது. பங்குனி திருவிழாவில் பக்தர்கள் ஆடுகள், கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதற்காக ஆடு, கோழிகளை வாங்க ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று மானாமதுரை வாரச்சந்தையில் குவிந்தனர்.