மதுராந்தகம், மார்ச் 16: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கடமலைப்புத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில், மலை அடிவாரப் பகுதியில் குன்று புறம்போக்கு மற்றும் பாட்டை பகுதியில் உள்ளது. இங்கு, சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட புறம்போக்கு நிலத்தினை வீட்டு மனைகளாக மாற்றி மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு வழங்க மதுராந்தகம் வருவாய்த்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடமலைபுத்தூர் கிராம மக்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், இந்நிலத்தில் ஊராட்சியின் சார்பில் அரசு உயர்நிலை பள்ளி கட்டிடம் கட்ட ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை கட்டவும் எங்கள் ஊராட்சியின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.