திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. திட்ட இயக்குனர் தண்டபாணி, ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், ஆணையாளர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் உட்பட வட்ட வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பழையபட்டி ஊரணி குடிமராமத்து பணி மற்றும் கலைஞர் பூங்கா உள்ளிட்ட வளர்ச்சி பணிவுகளையும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்தார்.