தென்காசி மாவட்டத்தில் 16,247 மாணவர்கள் பிளஸ் 1 தேர்வு எழுதினர்

தென்காசி, மார்ச் 15: தென்காசி மாவட்டத்தில் நேற்று 16 ஆயிரத்து 247 மாணவர்கள் பிளஸ் 1 தேர்வு எழுதினர். 541 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. பிளஸ்1 தேர்வு நேற்று துவங்கியது. தென்காசி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 788 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 64 தேர்வு மையங்கள் மாவட்டம் முழுவதும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என ஆயிரத்து 322பேர் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விண்ணப்பித்த 16 ஆயிரத்து 788 மாணவ, மாணவியரில் நேற்று 16 ஆயிரத்து 247 மாணவ- மாணவியர் தேர்வு எழுதினர். 541 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு உரிய காவலர் பாதுகாப்பு. தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் மற்றும் பொதுத்தேர்வுகள் எழுதும் தேர்வர்கள், ஆசிரியர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர வசதியாக தேவையான போக்குவரத்து வசதி போன்ற பொதுத் தேர்வுகளை சிறப்பாக நடத்திட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தென்காசி மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பல்வேறு துறைகளின் உதவியுடன் செய்யப்பட்டிருந்தது.

Related Stories: