சிவகங்கை: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 17ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இது குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2ம் மற்றும் 4ம் வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை சார்பில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் வரும் 17ம் தேதி அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் நிறுவனங்கள் பங்கு பெறும் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. இதில் வேலை வழங்கும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யலாம்.