திண்டுக்கல், மார்ச் 14: திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் தற்காலிக கடைகள் வியாபாரத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
