பழநி, மார்ச் 14: பழநி அருகே கார் மோதிய விபத்தில் மனைவி கண்முன்னே கணவர் பரிதாபமாக இறந்தார்.பழநி கணபதி நகரை சேர்ந்தவர் முனியப்பன் (38). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி காளீஸ்வரி (35), மகன் முகேஸ் (14) ஆகியோருடன் டூவீலரில் கீரனூரில் இருந்து பழநிக்கு புதுதாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தார். புளியம்பட்டி அருகே வந்த போது, எதிரே வந்த கார், இவர்களது டூவீலர் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.