காரைக்கால்,மார்ச் 14: காரைக்காலில் 2,250 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை கலெக்டர் முகமது மன்சூர் ஆய்வு செய்தார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கியது. காரைக்கால் மாவட்டத்தில் 10 மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காரைக்காலில் 10 அரசு பள்ளி மற்றும் 15 தனியார் பள்ளிகள் சேர்ந்த மொத்தம் 2250 பேர் தேர்வு எழுதினர். மேலும் இவ்வாண்டு தனி தேர்வர்களாக 84 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு பணியில் 10 முதன்மை கண்காணிப்பாளர்கள், 10 துறை அலுவலர்கள், என மொத்தம் 8 பறக்கும் படையினர் தேர்வு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் 11 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எழுதி உள்ளனர்.