கும்பகோணம்: மகளிர்களின் பாலின சமத்துவத்தையும், உரிமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு மகளிர்களின் சிறப்பு இயல்புகளை பெருமைப்படுத்தி உலகம் முழுவதும் மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் உள்ள மகளிர் அமைப்புகள், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கும்பகோணத்தில் சர்வதேச மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட துணைத்தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். பெருமாண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் சுதா மாணிக்கம் வரவேற்றார்.