பெரும்புதூர்: தாம்பரம் அருகே அரசு பஸ் டிரைவரின் பைக் பெட்டியை உடைத்து ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் அருகே படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (48), சென்னை மாநகர பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் காலை படப்பை பஜாரில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்து, தனது பைக்கில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார். பின்னர், அதே பகுதியில் உள்ள பேட்டரி கடைக்கு சென்றுவிட்டு, வெளியே வந்து பார்த்தார்.