கீழ்வேளூர், மார்ச் 11: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று முதலாம் ஆண்டு பூர்த்தி சம்மஸ்கார அபிஷேகம் மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகம் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று காலை அனுக்ஞை, வினாயகர் வழிபாடுடன் யாகபூஜை தொடங்கியது. கோபூஜை நடைபெற்று மகா யாக பூஜை நடைபெற்றது.