பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது

வேப்பூர், மார்ச் 11: பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தவர் மீண்டும் பள்ளிக்கு சென்றபோது முக்கியமான புத்தகங்களை வீட்டிலேயே வைத்துவிட்டாராம். இதனால் கடந்த 7ம்தேதி வீட்டிற்கு போன் செய்து யாரையாவது எடுத்து வரச் சொல்லலாம் என்று கருதிய மாணவி பள்ளி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் செல்போனை கேட்டுள்ளார்.

அந்த வாலிபர் மாணவியிடம் நம்பர் வாங்கி வீட்டுக்கு போன் செய்து உடனே கட் செய்துள்ளார். பின்னர் போன் போகவில்லை, நான் ஜெயங்கொண்டம் பகுதிக்கு தான் செல்கிறேன். என்னுடன் வா, வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு திரும்பி வரலாம் என கூறினார். இதனை நம்பிய மாணவி, வாலிபருடன் பைக்கில் சென்றார். ஆனால் அந்த வாலிபர் ஜெயங்கொண்டம் செல்லாமல் விருத்தாசலம் சாலையில் நல்லூர் நகர் பகுதியில் உள்ள காட்டுக்குள் சென்றார். பின்னர் அங்கிருந்த சவுக்கு தோப்பிற்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, செல்போனிலும் வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று மாணவியை மிரட்டினார்.

இதற்கிடையே மாணவியின் தாயார் தனக்கு வந்த மிஸ்டு கால் நம்பருக்கு போன் போட்டபோது அந்த வாலிபர் உங்கள் மகள் புத்தகம் எடுத்து வர மறந்துவிட்டாராம், இதனால் போன் பண்ணினேன் என்று கூறிவிட்டு கட் செய்து விட்டாராம். பின்னர் மாணவியை பைக்கில் ஏற்றி விருத்தாசலத்தில் விட்டுவிட்டு தப்பிவிட்டார். இதில் பயந்துபோன மாணவி அங்கிருந்து பஸ் ஏறி வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கடலூர் எஸ்பியிடம் புகார் அளித்தனர்.

அவர் இதுகுறித்து விசாரணை நடத்த வேப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில் மாணவியை பைக்கில் கடத்திச்சென்று பலாத்காரம் செய்தது ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி மகன் ஜீவா (24) என்பது தெரியவந்தது. இவர் கேட்டரிங் முடித்துவிட்டு சேலத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருவது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: