திருச்செந்தூர், மார்ச் 10: நடுநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.12.84 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். திருச்செந்தூர் அருகே உள்ள மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து நடுநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.12 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.