திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயிலில், திருக்கல்யாண கோலத்தில் உற்சவர் வீதி உலாவுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்போரூர் கந்தசாமி கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 3ம் தேதியும், 6ம் தேதி சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி உற்சவமும், தெப்ப உற்சவமும் நடந்தன.