பரமக்குடி: பரமக்குடியில் யூனிக் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி அண்ட் கிறிசின் கான் சித்தோரியோ கராத்தே பள்ளி சார்பில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இப்பள்ளியில் 8 வயது முதல் 21 வயது வரை பல்வேறு பிரிவுகளில் போட்டியில் நடந்தது. போட்டியில் மாணவ,மாணவிகளுக்கு கட்டா போட்டியும், அதேபோல் குமிட்டே போட்டியும் நடைபெற்றது. போட்டியினை ஆயிரவைசிய சபைத் தலைவர் ராசி என்.போஸ் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். பள்ளியின் தாளாளர் லெனின் குமார்,ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி தாளாளர் முருகானந்தம், ஆயிரவைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொருளாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
