காஸ் விலை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே தாராசுரம் பேருந்து நிலையத்தில் ஒன்றிய அரசு சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கும்பகோணம் மாநகர குழு சார்பில் மாநகர தலைவர் சுமதி தலைமையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மண் அடுப்பில் விறகுடன் பானை வைத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்க நிர்வாகிகள் ஜோதி, தமிழரசி சரண்யா, சந்தான மாரி, வசந்தி மற்றும் மாதர் சங்கத்தினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டனர்.

Related Stories: