விராலிமலை: மாவட்ட அளவில் நடைபெற்ற வினாடி வினா - போட்டியில் விராலிமலை அருகே உள்ள செரளபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. இலக்கிய மன்ற போட்டி, சிறார் திரைப்படப் போட்டி, வினாடி வினா போட்டி என 6ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றது. இப்போட்டிகள் முதலில் பள்ளி அளவிலும் அடுத்து வட்டார அளவிலும் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒன்றிய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படும். இறுதியாக மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டியில் இரு மாணவர்கள் அதாவது ஒரு மாணவர் ஒரு மாணவி என்பது ஒரு குழு ஆகும். பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் செரளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் ஒன்றிய அளவில் நடந்த வினாடி வினா போட்டியில் செரளபட்டி பள்ளி மாணவர்களே வெற்றி பெற்றனர்.