கோவில்பட்டி, மார்ச் 8: கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா சார்பில் மாணவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் பங்கேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மதிவண்ணன் முன்னிலை வகித்தார். அதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கான மார்க்கெட்டிங், முக ஓவியம், புதையல் வேட்டை, நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதுகலை முதலாம் ஆண்டு நுண்ணறிவியல் துறை மாணவர் முத்துமுனியசாமி வரவேற்றார்.