சாத்தான்குளம்: சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா, முதல் பட்டமளிப்பு விழா நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் டாக்டர் ஸ்டீபன் தலைமை வகித்தார். மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீர்செல்வம், மறைமாவட்ட பொருளாளர் சகாயம், மன்னார்புரம் பங்குதந்தை எட்வர்ட் முன்னிலை வகித்தனர். ஆங்கில சிறப்பு ஆசிரியர் ரோஜர் வரவேற்றார். சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைகுரு ஜோசப் ரவிபாலன் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தாளாளரும், முதல்வருமான பேட்ரிக் அந்தோணி விஜயன் ஆண்டறிக்கை சமர்பித்தார். விழாவில் சாத்தான்குளம் யூனியன் சேர்மன் ஜெயபதி, புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனன், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர், தூத்துக்குடி தென்மாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப் ஸ்டாலின், தென்மண்டல பொதுநிலையினர் பணியக இயக்குநர் மரியஅரசு, தென்மாவட்ட இளையோர் பணிக்குழுவின் கண்காணிப்பாளர் சேசுராஜ் ஆகியோர் பேசினர்.