பழநி: பழநி அருகே கொக்கரக்கல் வலசு, ராஜாம்பட்டி கிராமங்களில் மானாவாரி நிலங்கள் அதிகளவு உள்ளன. இந்நிலங்களில் வெளியூரை சேர்ந்த நபர்கள் இரும்பு, காப்பர் உள்ளிட்ட பொருட்களை பிரிப்பதற்கு மின்சார வயர்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்படுகிறது. இந்த புகையை சுவாசிப்பதால் இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு சுவாசநோய் ஏற்படுகிறது. இதனால் திறந்தவெளி இடங்களில் பொருட்களை எரிப்பதை இப்பகுதி மக்கள் தடுத்து வருகின்றனர். இதற்காக கண்காணிப்பு பணியும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கொக்கரக்கல் வலசு பகுதியில் உடுமலையை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரம் செய்யும் சிலர் மின்சார வயர்களை எரித்து கொண்டிருந்தனர். இதனால் கரும்புகை எழுந்துள்ளது.