விராலிமலை: விராலிமலை தாலுகா அலுவலகத்தில் காவிரி-வைகை-குண்டாறு திட்டம் தொடர்பான பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி தலைமை வகித்தார். விராலிமலை தாசில்தார் சதீஸ், காவிரி-வைகை-குண்டாறு திட்ட தாசில்தார் ஆரமுத தேவசேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிலம் கையக படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டத்தின் கீழ் காவிரி-வைகை-குண்டாறு திட்டத்திற்காக குன்னத்தூர் வட்டம் கலிமங்கலம் பகுதிகளில் நிலம் எடுப்பது தொடர்பாக அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.