மூவர்கோட்டையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரம் மூவர்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கலைவாணன் தலைமை வகித்தார். ஆசிரியர் மாரிமுத்து வரவேற்றார். நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் காப்போம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் தேன்மொழி, மகாலட்சுமி மீனா, பெற்றோர்கள் மற்றும் பல்நோக்கு சேவை இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆசிரியர் ஜார்ஜ் நன்றி கூறினார்.

Related Stories: