திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக துவக்கப்பட்டு மூன்றாம் ஆண்டாக இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கல்லணை காவிரி மற்றும் வெண்ணாறு ஆகிய பகுதிகளில் ரூ. 122.6 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகளில் இதுவும் ஒன்று. பணிகள் கடந்த ஆண்டுகளில் நடைபெற்று வந்த நிலையில் ஜூன் மாதம் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்ததால் அப்பணிகள் நிறுத்தப்பட்டது. இந்தஆண்டு மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் நிறுத்தப்பட்டு தற்பொழுது இரவு பகலாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் பூண்டி காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டும்பணி நடைபெற்று வருகிறது.