செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவிலில் உள்ள, பெருமாள் கோயிலில் மாசி மாத திருவிழா நேற்று நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவ விழா நேற்று நடைபெற்றது. கடந்த 4ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை இந்த விழா நடைபெறவுள்ளது. முதல் ஐந்து நாட்கள் தெப்ப உற்சவமும், அடுத்த ஐந்து நாட்கள் தவன உற்சவமும் நடைபெறவுள்ளது.
