ஓசூர், மார்ச் 5: ஓசூர் தளி சாலையில் வேளாங்கண்ணி பள்ளி அருகில், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து எம்.கே.எண்டர்டெயின்மெண்ட் உரிமையாளர் கனகராஜ் கூறியதாவது: கடலுக்கு அடியில் வாழும் சுமார் 50 ரக வண்ண மீன்கள், குகை மீன் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் கடலுக்கு அடியில் நடப்பது போன்ற பிரமிப்புடன், பிரமாண்டமாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் மட்டுமே, இம்மாதிரி அரங்கங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஓசூரில் முதன்முறையாக அமைத்துள்ள இந்த குகை மீன் கண்காட்சியை, குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் வெகுவாக கண்டுகளித்து வருவது சிறப்பு அம்சமாகும்.