ஆவணமின்றி பைக்கில் எடுத்து செல்லப்பட்ட ரூ.51,800 பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 21: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், நித்யா தலைமையிலான பறக்கும் படை குழுவினர் நேற்று பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பொ.மல்லாபுரத்தில் இருந்து கடத்தூர் நோக்கி திப்பிரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் (47), மாதையன் (66) ஆகியோர் பைக்கில் வந்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது, மாதையனிடம் ரூ.51,800ஐ உரிய ஆவணமின்றி கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்து பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அந்த ரொக்கம் மூடி முத்திரையிட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

Related Stories: