சாத்தூர், மார்ச் 5: சாத்தூர் நகராட்சி ஆணையாளர் இளவரசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘‘சாத்தூர் நகராட்சி பகுதியில் 24 வார்டு பகுதியில் உள்ள 16 சமுதாய கழிப்பறைகள், 5 பொது கழிப்பறைகள், புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. எனவே சாத்தூர் நகர் பொதுமக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வந்து செல்லும் போதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும்.