உசிலம்பட்டி, மார்ச் 5: உசிலம்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள 58 கிராம கால்வாய் திட்டத்தின் கட்டுமான பணிகளை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று ஆய்வு செய்தார். உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்தில் ஆண்டு தோறும் நிரந்தரமாக நீரை திறக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பகுதியில் உள்ள 58 கிராம பாசன கால்வாயின் தொட்டிப்பாலத்தை நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார்.
