மேலூர், மார்ச் 5: மேலூர் அருகே பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலூர் அருகே திருவதாவூரில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயிலில், ஆண்டு தோறும்பூக்குழி திருவிழா நிகழ்ச்சி தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா பிப்.23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.