ஒட்டன்சத்திரம், மார்ச் 5: ஒட்டன்சத்திரம் அருகே ேதாட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் கன்று குட்டி உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தா.புதுக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். நேற்று முன்தினம் இரவு இவரது தோட்டத்தில் கன்று குட்டி ஒன்று கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில், இத்தோட்டத்திற்கு காட்டு யானை ஒன்று கன்று குட்டியை தாக்கியது.