திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் மாசிப்பட்ட எள் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மார்ச் 15ம் தேதிக்குள் காப்பீடு ெசய்து கொள்ள வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் நடப்பு ஆண்டு மாசி பட்டத்தில் எள் சாகுபடி சுமார் 1000 ஹெக்டேர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இவ்வருடம் பிப்ரவரி மாதத்தில் பெய்த பருவம் தவறிய மழையினால் உளுந்து பயறு அழிந்து போனாலும் மாசி பட்டம் எள் சாகுபடிக்கு தேவையான ஈரப்பதம் மண்ணில் உள்ளதால் விவசாயிகள் அதிக அளவில் எள் சாகுபடி செய்துள்ளனர் பாமணி கொருக்கை தேசிங்குராஜபுரம் சேகல், தீவம்மாபுரம், கொத்தமங்கலம், ஆலத்தம்பாடி, பழையங்குடி ஆகிய கிராமங்களில் எள் சாகுபடி பெரும் அளவில் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.