தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழாவுக்கான பந்தக்கால் நேற்று நடப்பட்டது. தேரோட்டம் மே 1ம் தேதி நடைபெறுகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா, சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்தாண்டிற்கான சித்திரை பெருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
