புதுக்கோட்டை: ஆளுநர் விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மருத்துவத்துறையில் தேவையான அனைத்து அடிப்படை திட்டங்களையும் நிறைவேற்றுவோம். குட்கா வழக்கில் உச்சநீதிமன்றம் தனது கடமையை செய்து கொண்டுள்ளது. வழக்கை அவர்கள் எடுத்து உள்ளனர். நோட்டீஸ் கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை. அதனை கொடுத்துள்ளனர்.