மதுரை, மார்ச் 4: கோயில் நிலத்தில் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில் விளக்கம் கேட்டு ஊராட்சிக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரை, ஒத்தக்கடையை சேர்ந்த பொன்.கார்த்திகேயன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஒத்தக் கடையிலுள்ள கோதண்டராமசாமி கோயிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் காவல் நிலையம் எதிரே உள்ளது. இந்த இடத்தில் சில்வர் பட்டறை கழிவுகள், கோழி மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. எனவே, கோயில் நிலத்தில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.