புதிதாக கட்ட கோரிக்கை திருவாரூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை

திருவாரூர், மார்ச் 2: திருவாரூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கும் சிறப்பு முகாம் அனைத்து ஊராட்சிமன்ற அலுவலகங்களிலும் நடைபெற்று வருவதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நீலநிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 890 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2வது செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், இரு மாதங்களுக்கு ஒருமுறை 2வது செவ்வாய்கிழமை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டஇயக்குநர் முன்னிலையிலும் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 10ம் தேதி வரையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிமன்ற அலுவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீலநிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

Related Stories: