தேனி: தேனி அருகே குன்னூரில் கால்நடைகளுக்கான வாய்காணை நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் ஷஜீவனா தொடக்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், தேனி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான வாய்காணை நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. தேனி அருகே குன்னூரில் நேற்று இம்முகாமினை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். அப்போது, முகாமிற்கு கொண்டு வரப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை குறித்தும், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தடுப்பூசி பணி தொடர்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ள விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மடிப்பேடுகள் குறித்தும் ஆய்வு கால்நடைத் துறை அதிகாரிகளிடம் கேட்டார்.