மதுரை, பிப்.28: மதுரை அரசு மருத்துவமனையில், ஸ்கேன் எடுக்க வந்த கர்ப்பிணியிடம் நூதன முறையில், மாங்கல்யத்துடன் கூடிய, தாலிக்கயிறை அபகரித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை ஐராவதநல்லூர், ராஜா நகரைச் சேர்ந்தவர் காயத்ரி(21). கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தார். பிரசவ வார்டில் ஸ்கேன் பரிசோதனைக்காக அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு பெண், ஸ்கேன் எடுப்பதற்காக காயத்ரியை ஸ்கேன் அறை இருந்து பகுதிக்கு கூட்டிச்சென்றார். அங்கு சென்றவுடன், அந்தப்பெண், காயத்ரியிடம், ``தங்கத்திலான தாலியை அணிந்துகொண்டு ஸ்கேன் அறைக்குள் செல்லக்கூடாது’’ எனக்கூறினார்.