திருவையாறு அருகே திங்களுர் வரதராஜ பெருமாள் கோயிலில் பாலாலயம்

திருவையாறு: திருவையாறு அருகே திங்களுர் வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு திருப்பணி தொடங்க பாலாயம் நடைபெற்றது. திருவையாறு அடுத்த திங்களூர் கிராமத்தில் மிக பழமை வாய்ந்த  தேவி, பூ தேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, திருப்பணி தொடங்க பாலாயம் நடைபெற்றது. இரண்டு கால பஞ்சசுத்த ஹோமம் பூர்ணாகுதி முடிந்து நாராயணன், ராஜு மற்றும் பக்தர்கள் உபயத்தோடு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கியது. பாலாலயத்தில் விமானம் உட்பிரகாரம் மதில் சுவர்கள் கோபுரங்கள் என அனைத்தையும் திருப்பணி முடித்து 2 மாத காலத்திற்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என திருப்பணி குழு தெரிவித்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கீதாபாய், செயல் அலுவலர் சக்திவேல், கோயில் எழுத்தர் செல்வன் மற்றும் பட்டாச்சாரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: