திருவாடானை, பிப். 25: திருவாடானை அருகே அஞ்சுகோட்டை பகுதியில் பழமையான அழகிய நாயகி அம்மன், ரூஆனிமுத்து கருப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பல ஆண்டுகளுக்கு திருப்பணிகள் மேற்கொண்ட பொதுமக்கள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதன்படி கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு முதல் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின் பூஜையில் இருந்த புனித நீர் உதவியுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், முழங்க கோயில் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தினர்.